Pages

Sunday 24 July 2011

மம்முட்டி வீட்டில் மீண்டும் சோதனை?

மம்முட்டி வீட்டில் மீண்டும் சோதனை?
சென்னை, ஜூலை 24: மலையாள நடிகர் மம்முட்டிக்குச் சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை நடத்த இருப்பதாக தெரிகிறது.
சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள நடிகர் மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் இரண்டு நாட்களுக்கு முன் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் இருவரது வீடுகளிலும் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை சிக்கியதாக கூறப்பட்டது.
இது குறித்து நடிகர் மம்முட்டியிடம் நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
அப்போது வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட ரூ.22 லட்சத்திற்கு வருமான வரித்துறையினர் கணக்கு கேட்டுள்ளனர். இது தொடர்பாக உரிய ஆவணங்கள் முறைப்படி சமர்ப்பிக்கப்படும் என மம்முட்டி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மம்முட்டிக்கு சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறையினர் நாளை மீண்டும் சோதன நடத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

0 comments:

Post a Comment